தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று

Go down

 திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று  Empty திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று

Post  meenu Fri Feb 01, 2013 12:49 pm

கவலைப்படாதீர்களம்மா. உங்கள் கவலை, கோபம், ஆற்றாமை, வெறுப்பு எல்லாவற்றையும் அப்படியே வேண்டுதலாக மாற்றுங்கள்.

எப்படி? கோபம் வரும்போது, ‘பகவானே... எப்படியாவது என் கணவனை மாற்று’ என்றும், வெறுப்பு தோன்றும்போது, ‘அவரை என்னிடமிருந்து பிரித்து விடாதே’ என்றும் எல்லா வகையான மனக் குமுறல்களையும் இறைவனிடம் வேண்டுதலாக மாற்றுங்கள்.

பிறப்பதற்கு முன்பு கடவுள் ஒருவரே நமக்குச் சொந்தம். வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்களில் கூட அவரே உண்மையான சொந்தம் என்பதை உணருங்கள். சிவபெருமானில் பாதியாகத் திகழ்பவள் உமை. அதேசமயம் தீமை செய்பவர்களை அஞ்சி ஓடும்படி செய்கின்றவளும் அவளே.

மனதால் தீமை செய்பவர்களை ஒடுக்கி விடுவாள். மன்மதனின் ஆயுதங்களை நல்ல வழியில் செயல்பட வைப்பவளும் அவளே. ஒருமுறை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ‘உன்னைப்போன்று நான் வாழ வேண்டும் தாயே’ என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

வீட்டில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். அந்த சுடரில் அம்பாள் அமர்ந்திருப்பதாக பாவித்து தினசரி 108 முறை கீழ்க்காணும் ஸ்லோகத்தை படியுங்கள். உங்களுக்கு துரோகம் செய்வது நடக்காது போகும்.

பரி புரச் சீறடிப் பாசாங்குசை
பஞ்ச பாணி இன்சொல்
திரிபுர சுந்தரி! சிந்துரமேனியள்!
தீமை நெஞ்சில் பரிபுர வஞ்சரை
அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர்
செம்பாகத் திருந்தவளே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum