திருவெம்பாவை - 7
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 7
அன்னே யிவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
ன்னானை யென்னரையன் இன்னமுதென் றெல்லொமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள்....
தாயைப் போன்றவனே பலமுறை நாங்கள் அழைத்தும் நீ பேசாமல் இருக்கின்றாய்.
தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் இயலாதவன் சிவபெருமான். ஒப்பற்ற
பெரும்புகழை உடையவன். அவனுடைய சின்னங்களின் ஒலியைக் கேட்டதும் சிவனே என்று
கூறுவாயே தென்னவனே என்று சொல்லும் முன்பே தீயில் பட்ட மெழுகு போல்
உருகுவாய் அப்படிப்பட்ட உனக்கு இன்று என்ன வந்தது? நாங்கள் தலைவன்,
அமுதமானவன், தந்தை என்று சேர்ந்தும், தனித்தனியாகவும் சொல்வதை கேட்டும்
உறங்குகின்றயே இப்படிப்பட்ட தூக்கம் தேவைதானா? எழுந்துவா?
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum