திருவெம்பாவை - 13
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றுஇசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்ப சிலம்புக் கலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்
பொருள்.....
நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன.
செந்தாமரை மலர்களும் உள்ளன. அன்னை பார்வதி குவளை மலர் நிறம் உடையவள்.
சிவபெருமான் செந்தாமரை மலர் நிறம் உடையவர். இங்கே பறவைகளினால் பல தரப்பட்ட
ஒலி உண்டாகிறது. உடல் அழுக்கைப் போக்க பலர் நீராட வருகிறார்கள்.
ஆகவே இந்தப் பொய்கை எமது இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது.
பொய்கையில் நம் உடம்பில் உள்ள அணிகலன்கள் ஓசை எழுப்பவும், உள்ளம்
பூரிக்கவும், தாமரை மலர்கள் நிறைந்து இருக்கும் பொய்கையில் மூழ்கி
நீராடுவோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum