திருவெம்பாவை -6
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை -6
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகரா யின்மை புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகா யுனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குத் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.
பொருள்......
மானைப் போன்றவனே நாளைக்கு நானே முதலில் வந்து உங்களை எழுப்புவேன் என்று
கூறினாயே நேற்று நீ சொன்ன சொற்கள் என்ன ஆயின? இன்னும் உனக்குப் பொழுது
விடியற்வில்லையா? உலகில் உள்ளவர்களும், வானுலக தேவர்களும், பிற உலகத்தாரும்
முழுமையாக அறிய முடியாதவன் இறைவன்.
அப்படிப்பட்டவன் எங்கள் மீது கருணை காட்டுகின்றான். அவன் பாதங்களை வணங்கிப்
புகழ்ந்து நாங்கள் பாடுகின்றோம். நீ வீட்டின் வாசல் கதவையும்
திறக்கவில்லை. வாய் திறந்து பதிலும் சொல்லாமல் அவன் புகழையும் பாடால்
உறங்குகின்றாயே இது உனக்கு சரி தானா? நம் எல்லோருக்கும் தலைவனாக விளங்கும்
இறைவனை நீ துயில் எழுந்து பாடுவாயாக.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum