தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவெம்பாவை 15

Go down

திருவெம்பாவை 15 Empty திருவெம்பாவை 15

Post  amma Fri Jan 11, 2013 12:30 pm

திருவெம்பாவை 15 B5c8d5c0-dd18-4140-a019-cd3529bd541b_S_secvpf









ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே, நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள்; சித்தம் களிகூர,
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்,
பாரொருகால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்; பேரரையற்கு இங்ஙனே பித்தொருவ ராமாறும்,
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வாருருவப் பூண்முலையீர், வாயார நாம் பாடி,
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.

பொருள்......
அணிகலன்களுடன் கூடிய மார்புக்கச்சு அடி அணிந்த பெண்களே ஒரு பெண்
தனித்திருந்து இறைவனின் சிறப்புகளை ஓயாமல் பேசிக் கொண்டு இருக்கிறாள்.
ஒவ்வொரு தடவையும் எம்பெருமான் என் தலைவன் என்று ஓயாமல் கூறுகிறாள். அந்த
மகிழ்ச்சியில் அவள் கண்களில் இருந்து கண்ணீல் தாரை, தாரையாக பெருக்
கெடுத்து வழிகின்றது.

இறைவனை நினைத்து பல முறை
விழுந்து வணங்கி அப்படியே தன்னை மறந்து கிடக்கிறாள். வேறு யாரையிம் வணங்க
மாட்டாள். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மேலாக உள்ள ஆண்டவனை வணங்கும்
இவள் நம்மால் போற்றப்பட் வேண்டியவள். இவள் நம்மால் போற்றப்பட்ட வேண்டியவள்.
இவள் வணங்கும் ஓப்பற்ற சிறப்புடைய பெருமான் யார்? அவன் புகழ் பாடி மலர்கள்
நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum