திருவெம்பாவை - 2
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும் போது எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையார் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர்யாம் ஆர்ஏலோர் எம்பாவாய்
பொருள்......
நல்ல பொருத்தமான அணிகலன்களை அணிந்து இருக்கும்
பெண்ணே இரவும், பகலும் நாம் பேசும் போது என் அன்பு எல்லாம்
இறைவனுக்கே என்று கூறுவாய். ஆனால் இப்போது மலர்
படுக்கையில் அல்லவா விருப்பம் வைத்து உள்ளாய்.
வேண்டத்தகாத பேச்சுக்களை பேசி விளையாட இது நேரம்
இல்லை.ஆகையால் விளையாட்டு வேண்டாம். இது அப்படிப்பட்ட
இடமும் கிடையாது. அதற்கான நேரமும இதுவல்ல.
இறைவனின் பாதங்களை அடைய தங்களுக்கு தகுதியில்லை என
தேவர்களே பின் வாங்குகிறார்கள். இந்த நேரத்தில்
சிவலோகத்தின் தலைவன் தில்லை சிதம்பரத்தின் ஆனந்தக்
கூத்தன் சிவபெருமான் நம்மைக் காக்க இறங்கி வந்துள்ளான். நாம்
சென்று அவனை வழிபடுவோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum