திருவெம்பாவை – 14
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை – 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடுஏலோர் எம்பாவாய்
பொருள்.....
நமது காதுகளில் அணிந்துள்ள தோடுகள் உடம்பின் மற்ற பகுதிகளில்
அணியப்பட்டுள்ள நகைகள், தலையில் சூடியுள்ள மாலைகள், நாம் நீரில் குளிக்கும்
பொழுது அசைந்து ஆடுகின்றன. அந்த மாலையில் மலர்களில் உள்ள வண்டுகளும்
எழுந்து ஆட குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவோம்.
பின்னர் சிதம்பரம் என்னும் சிற்றம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனைப்
பாடுவோம். அவன் சூடியுள்ள கொன்றை மலர் மாலையில் பெருமையை பாடுவோம். இறைவன்
முதலும், முடிவும் இல்லாதவன். அவனோடு இணைந்த உமையம்மை ஜீவன் சக்தி என்னும்
பொருளை சொல்பவள். இந்த இருவர் பாதங்களின் சிறப்பைப்பாடி நீராடி மகிழ்வோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum