தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகள் மீது வன்புணர்வு முயற்சி: தந்தை துப்பட்டாவால் கொலை

Go down

மகள் மீது வன்புணர்வு முயற்சி: தந்தை துப்பட்டாவால் கொலை Empty மகள் மீது வன்புணர்வு முயற்சி: தந்தை துப்பட்டாவால் கொலை

Post  meenu Sat Mar 16, 2013 1:14 pm



0


போதையில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற நபர் ஒருவர் மகள்மாரால் கழுத்து நசித்து கொல்லப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் நெமிலி நெல்லிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சூரியகலா. மகள்கள் இருவரும் செல்போன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

மோகன் நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்தவர் மகள் என்றுகூட பார்க்காமல் பலாத்கார நோக்கில் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகள் ஆத்திரத்தில் தந்தையை தாக்கினார். சகோதரியும் சேர்ந்து தாக்கினார்.

மோகன் தரையில் சாய்ந்ததும் மகள்கள் இருவரும் சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினர்.

மூச்சு திணறலில் துடிதுடித்த மோகன் வீட்டுக்குள்ளேயே பிணமானார். பின்னர் தாய், மோகனின் பிணத்தை வீட்டுக்குள் அறையில் வைத்து பூட்டிவிட்டு மகள்கள், மகனுடன் தலைமறைவானார்.

இன்று காலை மோகனுடன் வேலைக்கு செல்பவர்கள் அவரை தேடி வந்தனர். அப்போது வீடு பூட்டிக் கிடந்தது. வாசலில் மோகனின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகன் பிணமாக கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தலைமறைவாக இருந்த சூரியகலா மற்றும் அவரது மகள்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். போதையில் தவறாக நடக்க முயன்றபோது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மகள்களே கொலை செய்தது தெரியவந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum