திருவெம்பாவை 17
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை 17
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாத்தோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோ எம்பாவாய்
பொருள்......
தேன் சிந்தும் வாசமிக்க மலர்களை அணிந்த கூந்தலை உடையவரே திருமால், பிரம்மா, தேவர்கள் இவர்கள் பெற இயலாத பேரின்பத்தை
நமக்கு வழங்கபவன் இறைவன்.நம் வேண்டுதலுக்கு இணங்க வீடுகள் தோறும் தன்னுடைய செந்தாமரை போன்ற திருப்பாத காட்சி
தந்தவன்.
அடியார்களின் நோய் தீர்க்கும் இறைவன். அமுதன் போன்றவன். அந்த இறைவனை நாம் பாடுவோம். தாமரைக்குளத்தில் மூழ்கி
நீராடுவோம். நம் குற்றங்கள் நீங்க ஆடி மகிழ்ந்து பாடுவோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum