திருவெம்பாவை 20
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்!
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்!
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்!
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்!
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்!
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்!
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்!
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
பொருள்......
ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியான சிவபெருமானே ஒளி வீசும் உன் திருப்பாதங்களை எங்களுக்கு தந்து இருள் புரிய
வேண்டும். உயிர்கள் தோன்றவும், நிலை பெறவும் அழியவும் காரணமாக உள்சுழல் அணிந்த திருவடிகளை போற்றுகிறோம்.
திருமாலும்,
பிரம்மனம் காண முடியாத உன் பாதங்களை வணங்குகிறோம். எங்களுக்கு முக்தி நிலை அளிக்கும் அழகிய மலர் அடிகளை
போற்றுகிறோம். இறைவனின் சிறப்புகளை புகழ்ந்து பாடி நாம் அனைவரும் மார்கழி நீராடுவோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum