திருவெம்பாவை 19
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பொருள்........
எங்கள் இறைவா நாங்கள் உனக்கே அடைக்கலம்!. உம்மிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே
அடைக்கலம் என்ற வார்த்தையை மாற்றி அமைக்க அருள் செய்!. எங்களுடைய மார்பகங்கள் உன் மேல் அன்பில்லாதவர்களை தழுவாது.
எங்கள் கைகள் உனக்கு மட்டுமே தொண்டு செய்யும்.
எங்கள் கண்கள் உன்னை தவிர வேறு எதையும் பார்ப்பது இல்லை. இத்தகைய
நிலையில் படி இறைவா எங்களுக்கு நீ அருள் புரிந்தால் சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள்
கவலை கொள்ள மாட்டோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum