திருவெம்பாவை 8
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை 8
கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்!
பொருள்......
பொழுது விடிந்து கோழிகள் கூவுகின்றன. மற்றப் பறவையினங்களும் குரல்
எழுப்புகின்றன. கோவிலில் உள்ள வெண் சங்ககள் முழங்கும் ஒலியும் கேட்கின்றது.
ஒப்பிட்டுக் கூடிமுடியாதவனும். ஒளிவடிவானவனும், கருணையே உருவம் ஆகி
உண்மையானப் பொருளாக விளங்கம் இறைவனை நாங்கள் பாடினோம். அதை நீ
கேட்கவில்லையா? இது என்ன தூக்கம்? வாயை திறக்காமல் இருக்கிறாயே எல்லா
உலகங்களும் அழிந்து படும் ஊழிக்காலத்தில் கூட அழியாத முதல்வன் நம் இறைவன்.
அவன் ஏழைப்பங்காளன். அவனைப் புகழ்ந்து பாடுவோம். எழுந்து வா!
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum