திருவெம்பாவை 18
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
பொருள்.....
திருவண்ணாமலையில் வாழும் சிவபெருமானின் திருப்பாதங்களை தேவர்கள் வணங்கினர். அப்போது அவர்கள் அணிந்துள்ள மகுடங்களில்
உள்ள இரத்தினங்கள், இறைவனின் ஒளிக்கு முன் ஒளியை இழந்தன. அதுபோல உடகெங்கும் சூரிய ஒளி பரவும் போது இருள் நீங்கியது.
நட்சத்திரங்களும் மறைந்து போயின. ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், வானாகவும், மண்ணாகவும் இத்தனையும் இன்றி வேறு
ஆகவும் அடியார்களுக்கு அமுதமாகவும் விளங்குபவன் இறைவன். அவன் பெருமைகளைப் பாடி மலர் நிறைந்து விளங்கும் நீரிலே
ஆடுவோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum