தூத்துக்குடி ஸ்பெஷல் மக்ரூன்
Page 1 of 1
தூத்துக்குடி ஸ்பெஷல் மக்ரூன்
தூத்துக்குடி தொடங்கி கன்னியாகுமரி வரை
யிலான கடலோர கிராமங்களின் பெயர்கள், உணவுகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் போர்ச்சுகீசியர்களின் படிமங்கள் உறைந்துள்ளதைப் பார்க்கலாம். ஆங்கிலேயர்களைப் போல் இல்லாமல், போர்ச்சுகீசியர்கள்.
தங்கள் ஆதிக்கத்தை மட்டுமல்ல, கலாசாரத்தை
யும் மக்கள் மத்தியில் பரப்பிச் செல்வதில் பெரும்
நாட்டம் கொண்டார்கள். இப்போதும் கடலோர
மக்கள் சுங்கா பைப்பால் புகையிழுப்பதெல்லாம்
அதன் விளைவுகளில் ஒன்றுதான். அவ்விதம்
தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்
களின் இனிப்பு பதார்த்தம்தான் "மக்ரூன்".
இந்த போர்ச்சுகீசிய வார்த்தைக்கு, ‘முந்திரி
யும் முட்டையும் கலந்த இனிப்பு’ என்று பொரு
ளாம். தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும்,
பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப்
பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்
களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து
‘மக்ரூன்’ செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியா
க வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்
குடி, குமரி மாவட்ட மக்கள் ‘கொல்லாக்கொட்டை’
என்று அழைக்கிறார்கள்.
பரவலாக தமிழகத்தின் எல்லாப் பகுதிகளி
லும் இந்த இனிப்பு கிடைத்தாலும், தோற்றுவா
யான ‘தூத்துக்குடி மக்ரூன்’தான் சுவையி
லும், தரத்திலும் முன்நிற்கிறது.1 கிலோ மக்ரூன் செய்ய, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல்
15 கோழி முட்டைகள் தேவை. முந்திரி,சர்க்கரையை நன்கு அரைத்துத்தூளாக்க வேண்டும். முட்டையின்
வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கலக்கவேண்டும். மக்ரூனின் மென்மை
யைத் தீர்மானிப்பது இந்த கலக்கல்தான். இதற்கென கிரைண்டர் போன்ற இயந்திரத்தை தூத்துக்குடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை
ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும்
அடிக்கிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி
மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள்.
மக்ரூனுக்கு வடிவம் வார்ப்பதுதான் முக்கியம்.
கைதேர்ந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்படும்.
ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்
கொண்டு, அதற்குள் மாவை அள்ளிவைத்து,
கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட, சுருள்
வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு.வடிவம் கிடைத்ததும், பேக்கரி அடுப்பின் மேல்தளத்தில், மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்"ரெடி.
உலகம் முழுதும் இந்த தூத்துக்குடி மக்ரூன்
கள் பயணிக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடு
களுக்கு நிறைய அனுப்பப்படுகின்றன.
முதன் முதலில், ம க் ரூனை விற் ப னைக் குக்
கொண்டுவந்தது முனிசிபாலிட்டி அலுவலகம்
எதிர்புறம் உள்ள தனலெட்சுமி பேக்கரி.
ஒரு தொழிற்சாலையைப் போல இந்தக்கடையில் தயா
ராகிறது மக்ரூன். ஒரு போர்ச்சுகீசிய பிரபுவிடம் இருந்து இக்கடையின் உரிமையாளர் அருணாசலம்பிள்ளை «நரடிய£க தொழில் கற்றாராம். இப்போது கடையை மகள் வேலம்மாள் நிர் வகிக்கிறார்.
யிலான கடலோர கிராமங்களின் பெயர்கள், உணவுகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றிலும் போர்ச்சுகீசியர்களின் படிமங்கள் உறைந்துள்ளதைப் பார்க்கலாம். ஆங்கிலேயர்களைப் போல் இல்லாமல், போர்ச்சுகீசியர்கள்.
தங்கள் ஆதிக்கத்தை மட்டுமல்ல, கலாசாரத்தை
யும் மக்கள் மத்தியில் பரப்பிச் செல்வதில் பெரும்
நாட்டம் கொண்டார்கள். இப்போதும் கடலோர
மக்கள் சுங்கா பைப்பால் புகையிழுப்பதெல்லாம்
அதன் விளைவுகளில் ஒன்றுதான். அவ்விதம்
தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்
களின் இனிப்பு பதார்த்தம்தான் "மக்ரூன்".
இந்த போர்ச்சுகீசிய வார்த்தைக்கு, ‘முந்திரி
யும் முட்டையும் கலந்த இனிப்பு’ என்று பொரு
ளாம். தூத்துக்குடியை நிர்வகித்த பிரபுக்களும்,
பாதிரிமார்களும் பிரேசில் நாட்டின் வடகிழக்குப்
பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல்
களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து
‘மக்ரூன்’ செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியா
க வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக்
குடி, குமரி மாவட்ட மக்கள் ‘கொல்லாக்கொட்டை’
என்று அழைக்கிறார்கள்.
பரவலாக தமிழகத்தின் எல்லாப் பகுதிகளி
லும் இந்த இனிப்பு கிடைத்தாலும், தோற்றுவா
யான ‘தூத்துக்குடி மக்ரூன்’தான் சுவையி
லும், தரத்திலும் முன்நிற்கிறது.1 கிலோ மக்ரூன் செய்ய, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ முந்திரி, 12 முதல்
15 கோழி முட்டைகள் தேவை. முந்திரி,சர்க்கரையை நன்கு அரைத்துத்தூளாக்க வேண்டும். முட்டையின்
வெண்கருவைக் கவனமாகப் பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கலக்கவேண்டும். மக்ரூனின் மென்மை
யைத் தீர்மானிப்பது இந்த கலக்கல்தான். இதற்கென கிரைண்டர் போன்ற இயந்திரத்தை தூத்துக்குடிக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை
ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும்
அடிக்கிறார்கள். பின், முந்திரிப் பவுடரை கொட்டி
மிதமான பதத்தில் பிணைக்கிறார்கள்.
மக்ரூனுக்கு வடிவம் வார்ப்பதுதான் முக்கியம்.
கைதேர்ந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்படும்.
ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக்
கொண்டு, அதற்குள் மாவை அள்ளிவைத்து,
கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட, சுருள்
வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு.வடிவம் கிடைத்ததும், பேக்கரி அடுப்பின் மேல்தளத்தில், மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்"ரெடி.
உலகம் முழுதும் இந்த தூத்துக்குடி மக்ரூன்
கள் பயணிக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடு
களுக்கு நிறைய அனுப்பப்படுகின்றன.
முதன் முதலில், ம க் ரூனை விற் ப னைக் குக்
கொண்டுவந்தது முனிசிபாலிட்டி அலுவலகம்
எதிர்புறம் உள்ள தனலெட்சுமி பேக்கரி.
ஒரு தொழிற்சாலையைப் போல இந்தக்கடையில் தயா
ராகிறது மக்ரூன். ஒரு போர்ச்சுகீசிய பிரபுவிடம் இருந்து இக்கடையின் உரிமையாளர் அருணாசலம்பிள்ளை «நரடிய£க தொழில் கற்றாராம். இப்போது கடையை மகள் வேலம்மாள் நிர் வகிக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூத்துக்குடி மாவட்டத்தில்,
» ஸ்பெஷல் வடை
» தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது
» முந்திரிக்கொத்து இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
» ஸ்பெஷல் வடை
» தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது
» முந்திரிக்கொத்து இது நாகர்கோவில் ஸ்பெஷல்
» தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை விழா கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum