தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு

Go down

சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு Empty சித்திரை ஆட்டத்திருநாள் : சபரிமலை கோயிலில் 11ம் தேதி நடை திறப்பு

Post  ishwarya Sat Feb 16, 2013 2:04 pm

திருவனந்தபுரம்: சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 11ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் இரவு கோயில் நடை சாத்தப்படும். ஐப்பசி மாத பூஜைகளுக்குப்பின்னர் கடந்த மாதம் 21ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வருகிற 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வருகிற 11ம் தேதி திறக்கப்படும்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் சித்திரை திருநாள் மகாராஜா. இவரது நினைவாக ஒவ்வொரு வருடமும் மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் சித்திரைத் திருநாள் மன்னரின் பிறந்த நாள்
வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 11ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 11ம் தேதி மாலை 5.30 மணியளவில்
தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோயில் நடை திறப்பார்.

அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தொடர்ந்து சித்திரை ஆட்டத் திருநாள்

சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் 12ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக வருகிற 15ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். மறுநாள் முதல் பிரசித்தி பெற்ற மண்டல கால பூஜைகள் தொடங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum