தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு

Go down

  பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு Empty பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு

Post  ishwarya Thu May 23, 2013 5:19 pm

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட திருவிழா வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27ம் தேதி ஆராட்டு சடங்குடன் நிறைவடைகிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பங்குனி மாத பூஜைகளும் வருகின்றன. பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று (14ம் தேதி) கோயில் நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி கோயில் நடையை திறக்கிறார்.பங்குனி உத்திர திருவிழா வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 17ஆம் தேதி தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் கோயிலில் சுத்திகிரியை பூஜை நடக்கிறது. 18ம் தேதி காலை 10 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி கொடியேற்றுவார்.திருவிழாவின் 9ம் நாளான 26ம் தேதி இரவு சரங்குத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் (27ம் தேதி) காலை 11.30 மணியளவில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு சடங்கு நடைபெறும். அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum