தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல

Go down

சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல Empty சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல

Post  meenu Fri Feb 01, 2013 1:27 pm


ஆதாரக் கடவுளான விநாயகரின் திருப்பாதங்களை மானசீகமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அறுகம்புல் சிரஞ்சீவி தன்மை வாய்ந்தது. வெயிலில் சருகுபோலக் காய்ந்து விடும். இருக்கும் இடமே தெரியாது. ஆனால், அதுவே மழை நாளில் பச்சைப் பசேலென்று வளர்ந்து விடும்.

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த அறுகம்புல்லை வினை தீர்க்கும் விநாயகருக்கு தினமும் சாற்றி வணங்குங்கள். உங்கள் மகளையும் வணங்கச் சொல்லுங்கள். எப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்தும் அவர் உங்களை மீட்டு கொண்டு வந்து விடுவார்.

இறைவன் கொடுத்த உயிரை துறக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. ராமாயண சுந்தரகாண்டத்தில் அனுமனிடம் கணையாழியைப் பெற்றுக் கொண்ட அன்னை சீதை, ‘நல்ல எண்ணத்துடன் வாழ்பவர்களுக்கு நீண்ட காலத்துக்கு கஷ்டம் தந்தாலும் பின்னால் நிச்சயம் கடவுள் ரட்சிப்பார்’ என்றாள்.

அம்பாளின் படத்திற்கு முன்பு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து, கீழ்க்காணும் அபிராமி அந்தாதி பாடலை 21 முறை சொல்லுங்கள்.

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ!
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நானும், என் கணவரும் இரண்டு வருடங்கள்கூட சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாங்கள் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» வனிதா என் மகள் என்று சொல்லவே வேதனையாக இருக்கிறது – விஜயக்குமார் ஆவேசம்
»  எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்
»  பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum