தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Go down

 சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Empty சஞ்சய் தத் சரணடைய 4 வாரம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Post  ishwarya Sat May 04, 2013 3:00 pm

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். எனவே மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், இதற்காக ஏப்ரல் 18-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், சஞ்சய் தத் தான் ஒப்பந்தம் செய்துள்ள படங்களை முடித்துக் கொடுப்பதற்காக, தண்டனையை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கோர்ட்டில் ஆஜராவதற்கு 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சதாசிவம், சௌகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சஞ்சய் தரப்பில் ஆஜரான வக்கீல் ரூ.270 கோடி செலவில் எடுக்கப்படும் பல்வேறு படங்களில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். எனவே, அவர் சரணடைவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதம் நீடிக்க வேண்டும் என்று வாதாடினார்.

அரசு தரப்பு வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் காலஅவகாசம் கேட்ட 3 பேருடைய மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, சஞ்சய் தத்துக்கு காலஅவகாசம் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினர். என்றாலும், சஞ்சய் தத் படங்களை முடித்துக் கொடுக்க வேண்டியதை கருத்தில் கொண்டு அவர் சரணடைய 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறை செல்ல மேலும் கால அவகாசம் வேண்டும்: சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு
»  பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
»  நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» 1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
» தண்டனைக்கு ஆஜராக 6 மாதம் அவகாசம்: சஞ்சய் தத் மனு மீது நாளை விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum