சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூர் நாளை பலப்பரீட்சை
Page 1 of 1
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூர் நாளை பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது. நாளை சென்னையில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றது.
உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி 2-வது ஆட்டத்தில் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் உள்ளது.
சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மைக் ஹஸ்சி (86 ரன்), முரளி விஜய் (50) பேட்டிங் சிறப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு 139 ரன் குவித்து சாதனை படைத்தது.
டோனியும் நல்ல நிலையில் உள்ளார். சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத், ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா ஆகி யோர் உள்ளதால் பேட்டிங் வலுவாக உள்ளது. பந்து வீச்சில் நானஸ், அஸ்வின், பிரவோ ஆகியோர் சிறப்பான பங்களிப்பு அளிப்பதால் சென்னை அணி நம்பிக்கையுடன் உள்ளது. ஆல்-ரவுண்டர் அல்பி மார்கல் நாளைய ஆட்டத்தில் களம் இறங்கினால் கிறிஸ் மோரிஸ் நீக்கப்படலாம்.
வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. சிக்சர் மன்னன் கிறிஸ்கெய்ல் ஆட்டம் அதிரடியாக இருக்கிறது. அவர் 4 ஆட்டத்தில் 191 ரன் குவித்து உள்ளார். இதில் 14 சிக்சர்கள் அடங்கும். அவர் மும்பை எதிராக 92 ரன்னும், நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 85 ரன்னும் குவித்தார். அவரை கட்டுப்படுத்தினால் மட்டுமே சென்னை வெற்றியை நினைத்து பார்க்க முடியும்.
அடுத்து களம் இறங்கும் வீராட் கோலி (198 ரன் குவித்து முதலிடம்), டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்களும் உள்ளன. பந்துவீச்சில் ஆர்.பி.சிங், வினய்குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோதுவதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். முன்னதாக நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும்- புனே வாரியர்சும் மோதுகின்றன.
உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி 2-வது ஆட்டத்தில் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் உள்ளது.
சென்னை அணி தனது 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மைக் ஹஸ்சி (86 ரன்), முரளி விஜய் (50) பேட்டிங் சிறப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு 139 ரன் குவித்து சாதனை படைத்தது.
டோனியும் நல்ல நிலையில் உள்ளார். சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத், ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா ஆகி யோர் உள்ளதால் பேட்டிங் வலுவாக உள்ளது. பந்து வீச்சில் நானஸ், அஸ்வின், பிரவோ ஆகியோர் சிறப்பான பங்களிப்பு அளிப்பதால் சென்னை அணி நம்பிக்கையுடன் உள்ளது. ஆல்-ரவுண்டர் அல்பி மார்கல் நாளைய ஆட்டத்தில் களம் இறங்கினால் கிறிஸ் மோரிஸ் நீக்கப்படலாம்.
வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியில் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. சிக்சர் மன்னன் கிறிஸ்கெய்ல் ஆட்டம் அதிரடியாக இருக்கிறது. அவர் 4 ஆட்டத்தில் 191 ரன் குவித்து உள்ளார். இதில் 14 சிக்சர்கள் அடங்கும். அவர் மும்பை எதிராக 92 ரன்னும், நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 85 ரன்னும் குவித்தார். அவரை கட்டுப்படுத்தினால் மட்டுமே சென்னை வெற்றியை நினைத்து பார்க்க முடியும்.
அடுத்து களம் இறங்கும் வீராட் கோலி (198 ரன் குவித்து முதலிடம்), டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்களும் உள்ளன. பந்துவீச்சில் ஆர்.பி.சிங், வினய்குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோதுவதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். முன்னதாக நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சும்- புனே வாரியர்சும் மோதுகின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா நாளை பலப்பரீட்சை
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
» ரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை!
» சென்னை-பெங்களூர் இரண்டு அடுக்கு ஏ.சி.ரெயில் நிரம்பி வழிகிறது: நின்று செல்ல அனுமதி இல்லை
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதிக்கம் நீடிக்குமா?-பஞ்சாப்புடன் நாளை மோதல்
» சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்
» ரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை!
» சென்னை-பெங்களூர் இரண்டு அடுக்கு ஏ.சி.ரெயில் நிரம்பி வழிகிறது: நின்று செல்ல அனுமதி இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum