ஆர்.பி.சிங் 'நோபால்' கருணையால் சென்னை அணி வெற்றி
Page 1 of 1
ஆர்.பி.சிங் 'நோபால்' கருணையால் சென்னை அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 16-வது லீக் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 4 ரன்னிலும், அகர்வால் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த கோலி, டி வில்லியர்ஸ் ஆட்டத்தால் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்க 165 ரன்கள் எடுத்தது. கோலி 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டி வில்லியர்ஸ் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் விஜய் 2, ஹசி 6 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ரெய்னா 30, பத்ரிநாத் 34, டோனி 33 ரன்களில் அவுட் ஆனார்கள். சென்னை அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா, மோரிஸ் களத்தில் இருந்தனர். ஆர்.பி. சிங் பந்து வீசினார். முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் இமாலய சிக்சர் விளாசினார்.
இதனால் 4 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் மோரிஸ் 2 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தை ஜடேஜா சந்தித்தார்.
இரண்டு ரன் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப் ஸ்டம்பிற்கு மேல் வந்த பந்தை ஆப் சைடு தூக்கி அடித்தார். பந்து நேராக பீல்டரின் கையில் விழுந்து கேட்சாக மாறியது. அம்பயர் நோபால் என அறிவித்தார். அதற்குள் ஜடேஜா ஒரு ரன் ஓடிவிட்டார். இதனால் சென்னை அணி 166 ரன்கள் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்.பி. சிங் நோபால் வீசியதால் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது.
டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 4 ரன்னிலும், அகர்வால் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த கோலி, டி வில்லியர்ஸ் ஆட்டத்தால் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்க 165 ரன்கள் எடுத்தது. கோலி 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டி வில்லியர்ஸ் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் விஜய் 2, ஹசி 6 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ரெய்னா 30, பத்ரிநாத் 34, டோனி 33 ரன்களில் அவுட் ஆனார்கள். சென்னை அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா, மோரிஸ் களத்தில் இருந்தனர். ஆர்.பி. சிங் பந்து வீசினார். முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் இமாலய சிக்சர் விளாசினார்.
இதனால் 4 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் மோரிஸ் 2 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தை ஜடேஜா சந்தித்தார்.
இரண்டு ரன் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆப் ஸ்டம்பிற்கு மேல் வந்த பந்தை ஆப் சைடு தூக்கி அடித்தார். பந்து நேராக பீல்டரின் கையில் விழுந்து கேட்சாக மாறியது. அம்பயர் நோபால் என அறிவித்தார். அதற்குள் ஜடேஜா ஒரு ரன் ஓடிவிட்டார். இதனால் சென்னை அணி 166 ரன்கள் பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்.பி. சிங் நோபால் வீசியதால் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
» சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் நாளை மோதல்
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» சேப்பாக்கத்தில் நாளை புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum