தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடைசி 6 ஓவரில் ஆட்டத்தை இழந்தோம்: வீராட் கோலி வேதனை

Go down

கடைசி 6 ஓவரில் ஆட்டத்தை இழந்தோம்: வீராட் கோலி வேதனை Empty கடைசி 6 ஓவரில் ஆட்டத்தை இழந்தோம்: வீராட் கோலி வேதனை

Post  ishwarya Sat May 04, 2013 12:49 pm

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஓவரில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. டிவில்லியர்ஸ் 32 பந்தில் 64 ரன்னும் (8பவுண்டரி, 1 சிக்சர்), வீராட் கோலி 47 பந்தில் 58 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் மாரிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆர்.பி.சிங் வீசிய கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது. ஜடேஜா முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. ஜடேஜா அந்த பந்தை தூக்கி அடித்த போது, "தேர்டுமேன்'' திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால் அது நோபால் என்று அறிவிக்கப்பட்டதால் சென்னை அணி தோல்வியில் இருந்த தப்பி வெற்றி பெற்றது.

நேபால் மூலம் ஒரு ரன்னும், ஜடேஜா ஓடியதன் மூலம் ஒரு ரன்னும் கிடைத்தது. இதனால் ஒரு பந்து எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. ஜடேஜா 20 பந்தில் 38 ரன்னும், டோனி 23 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ராம் பால் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

ஒட்டு மொத்தமாக எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. மிடில் ஓவரின் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை. எங்களது தொடக்க வீரர்கள் (ஹஸ்சி, விஜய்) சரியாக விளையாடததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 15 அல்லது 16-வது ஓவருக்கு பிறகு தான் அடித்து ஆட முடியும். விக்கெட்டுகள் விழாமல் இருக்கும் வகையில் கடைசியில் தான் அதிரடியாக ஆட முடியும். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-

கடைசி 6 ஓவரில் நாங்கள் ஆட்டத்தை இழந்து விட்டோம். இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. எங்களது பீல்டிங் நன்றாக இருந்தது. டோனி, ஜடேஜா அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றிவிட்டனர். 20 ஓவர் போட்டியில் இப்படி ஏற்படுவது சகஜம் தான். நாங்கள் மீண்டும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு வீராட்கோலி கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum