தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவேக் பேச… அரங்கை விட்டு வெளியேறிய பத்திரிகையாளர்கள்!

Go down

 விவேக் பேச… அரங்கை விட்டு வெளியேறிய பத்திரிகையாளர்கள்! Empty விவேக் பேச… அரங்கை விட்டு வெளியேறிய பத்திரிகையாளர்கள்!

Post  ishwarya Sat Apr 27, 2013 5:40 pm

இன்று ஆடியோ விழா ஒன்றிற்கு ‘பிரா & ஜட்டி’ ஆபாசப் பேச்சு புகழ் விவேக் வருவதாகவும், அதை பத்திரிகையாளர்கள் புறக்கணிப்பார்கள் மற்றும் விவேக்குக்கு கறுப்புக் கொடி காட்டுவார்கள் என்றும் சினிமா பிரஸ் கிளப் நேற்று அறிவித்திருந்தது நினைவிருக்கும்.

இந்த செய்தி தெரிந்தபிறகு, போலீசாரிடம் போன விவேக் தனக்கு பாதுகாப்பு வேண்டும், கறுப்புக் கொடி காட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். மேலும் தன் மீது முட்டை வீச பத்திரிகையாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஆட்சி மேலிடமும் கொண்டிருப்பதால், உடனடியாக விவேக் கோரிக்கை ஏற்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலை விழா நடந்தபோது பிலிம்சேம்பர் தியேட்டர் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் பாதிப் பத்திரிகையாளர்கள் அரங்குக்குள் நுழையாமல் வெளியிலேயே நின்றனர். கறுப்புக் கொடி ஏதும் காட்டவில்லை.

விழா துவங்கியதும், வி.சி.குகநாதன் மற்றும் ஆர்.கே. செல்வமணி போன்றோர், விவேக்குடன் பத்திரிகையாளர்கள் பேச்சு நடத்தி பிரச்சினையைத்த தீர்த்துக் கொள்ளலாம். மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல என்றெல்லாம் கூற, கடுப்பான ஒரு நிருபர், “விழாவுக்குத் தேவையானதை மட்டும் பேசுங்க. தேவையில்லாத பேச்சு வேண்டும். அந்த நடிகருடனான பஞ்சாயத்தை நாங்க பாத்துக்குறோம்!” என்றதும் அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள்.

பின்னர் மைக் பிடிக்க வந்தார் விவேக். பெரிய பத்திரிகை, சின்ன பத்திரிகை என்ற பேதமில்லாமல் அனைவரும் சடாரென வெளியே, வெறிச்சோடியது பிலிம்சேம்பர் வளாகம்!.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum