தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதை திருட்டு வழக்கு: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு பிடி ஆணை!

Go down

கதை திருட்டு வழக்கு: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு பிடி ஆணை! Empty கதை திருட்டு வழக்கு: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு பிடி ஆணை!

Post  ishwarya Tue Apr 23, 2013 5:13 pm

கதைத் திருட்டு வழக்கில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவர் கணவர் போனி கபூருக்கு பிடி ஆணை பிறப்பித்துள்ளது மீரட் நீதிமன்றம்.

பிரபல நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் மற்றும் 4 பேர் மீது, பீர்பால்சிங் ராணா என்ற சினிமா கதாசிரியர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், காபிரைட் பெற்ற தனது கதையை போனிகபூரின் பட நிறுவனத்துக்கு கடந்த 2004-ம் ஆண்டு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதே கதையை வைத்து போனிகபூர் நிறுவனம், கடந்த ஆண்டு வான்டட் என்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பி.டி.பாரதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேர் மீதும் ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு நேற்று உத்தரவிட்டார். 6 பேரும் நவம்பர் 22-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக ரூ. 1 கோடி கேட்டு வழக்கு – கலாநிதி மாறன், ஷங்கருக்கு நோட்டீஸ்
» இன்ப அதிர்ச்சி அளித்த பத்மஸ்ரீ பட்டம்: நடிகை ஸ்ரீதேவி பேட்டி
» நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் ரூ. 8 லட்சம் மதிப்பு நகைத் திருட்டு
» திருட்டு சி.டிக்களை தவிர்த்து திரையுலகினரை வாழ வைக்க வேண்டும்: நடிகை தேவயானி பேட்டி
» மீண்டும் கணவர் தயாரிப்பில் நடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum