தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்றைய அரசியல் முழுவதும் ஊழல் சூழ்ந்துள்ளது: ரா. பார்த்திபன்

Go down

இன்றைய அரசியல் முழுவதும் ஊழல் சூழ்ந்துள்ளது: ரா. பார்த்திபன் Empty இன்றைய அரசியல் முழுவதும் ஊழல் சூழ்ந்துள்ளது: ரா. பார்த்திபன்

Post  ishwarya Tue Apr 16, 2013 5:57 pm

ஊழலுக்கு எதிராக போராடி வரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலேயே திரையுலகினர் வந்து கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கம் அமைந்துள்ள சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி, 5 மணிக்கு முடிவுற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இயகுனர் மற்றும் நடிகருமான ரா. பார்த்திபன் பேசியதாவது;

“மேடையில் நன்றாக பேசுகிறாய், அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று எனது நண்பர்கள் கூறுவார்கள். இன்றைய அரசியல் முழுவதும் ஊழல் சூழ்ந்துள்ளது. ஆகையால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று தெரிவித்து விட்டேன்.
நான் அண்ணா ஹஸாரேவுக்கு ஆதரவாக இங்கு வரவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் லட்சோப லட்ச மக்களுக்கு ஆதரவாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளேன். அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒர் அணியில் திரள வேண்டும்,” என்றார்.

இப்போராட்டத்தில் தயாரிப்பாளர் கேயார், ஏ,எம்.ரத்னம், சித்ரா லட்சுமணன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், ரா.பார்த்திபன், மனோபாலா, தியாகு, நடிகர் சூர்யா, நடிகை ரோகிணி உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum