தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக்

Go down

தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக் Empty தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக்

Post  ishwarya Tue Apr 02, 2013 3:46 pm

நெல்லை: தமிழகத்தில் அராஜக ஆட்சி நடப்பதாக மறுகால்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலையின் குடும்பத்தாரை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
வானுமாமலையி்ன் மனைவி்க்கு ஆறுதல் கூறிய அவர் ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் வானுமாமலை சுடப்பட்ட கோவில் முன்பு இருந்து டிராக்டரில் நின்றபடி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் ஒரு குடும்பம் தெருவில் நிற்கின்றது. முதல்வர் மீது மரியாதை வைத்திருந்தேன். தற்போது அது மங்கிவிட்டது. மணல் கொள்ளை என்று கூறுபவர்கள் கோடி, கோடியாகக் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பிடிக்க முடியுமா? இன்ஸ்பெக்டர் வெறும் அம்பு மட்டும்தான், அதனை எய்தவர்களின் விபரம் விரைவில் வெளிவரும்.
ரூ.3 லட்சமும், வேலையும் கொடுக்க முடிந்தவர்களுக்கு குழந்தைகளின் தந்தையை கொடுக்க முடியுமா? இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். வானுமாமலை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது. இதற்காகத்தான் ஓட்டு போட்டோமா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுற்றுசூழல் சீர்கேட்டினால் மழை வளம் குறைந்துவிட்டது- நடிகர் விவேக் பேச்சு
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
» அடுத்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், என்று நடிகர் சூர்யா கூறினார்.
» மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதி உதவி – நடிகர் கார்த்திக் வழங்கினார்
» நடிகர் விஜயகுமார் மீதான நில மோசடி வழக்கு தொடரும்: நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum