தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருங்குயில் நாதன் பேட்டை சக்திபுரீஸ்வரர் கோவில்

Go down

கருங்குயில் நாதன் பேட்டை சக்திபுரீஸ்வரர் கோவில் Empty கருங்குயில் நாதன் பேட்டை சக்திபுரீஸ்வரர் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 10:24 pm

ஸ்தல வரலாறு...

இந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த சக்திபுரீஸ்வரர் தன்னை நாடி வருத் பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் குறைகளை தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பலி பீடம், நந்தியை கடந்ததும் மகா மண்டபம் உள்ளது.

அடுத்து அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலின் இடது புறம் விநாயகர், வலது புறம் வள்ளி, தெய்வானை முருகன் திருமேனிகள் உள்ளன. கருவறையில் இறைவன் அருள்மிகு இறைவன் அருள்மிகு சக்திபுரீஸ்வரராக சிவலிங்க திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

இறைவி கன்னிகளின் ஒருவரான வாரகி பூஜை செய்ய தலம் இது என்று வடமொழி புராணம் கூறுகிறது. எனவே மகாமண்டபத்தில் ஸ்ரீ பிராமஹி, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி, ஸ்ரீ கவுமாரி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ இந்திராணி என சப்த கன்னிமார் திருமேனிகள் அழகுற கொலுவிருக்கின்றன.

இக்கோவிலின் அருகில் கருணா தீர்த்தம் உள்ளது. நாமும் இக்கோவிலுக்கு சென்று கருணா தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவரது அருளை பெறுவேமாக.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum