தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடுக்கடலில் குளச்சல் மீன்பிடி

Go down

நடுக்கடலில் குளச்சல் மீன்பிடி Empty நடுக்கடலில் குளச்சல் மீன்பிடி

Post  meenu Tue Mar 26, 2013 5:25 pm

குளச்சல் மீன்பிடி படகை நடுக்கடலில் துரத்தி தூத்துக்குடி மீனவர்கள் இடித்து தள்ளினர். இதுபற்றி கடலோர போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்றனர்

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலான விசைப்படகுகள் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து விட்டு வருவது வழக்கம்.இவர்கள் குளச்சலில் இருந்து 170 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று மீன்பிடித்து வருவார்கள். குறிப்பாக கிழக்கு கடற்பகுதிக்கு சென்று மீன்பிடிப்பது இவர்களின் வழக்கம் ஆகும். இதுபோல கடந்த 10 நாட்களுக்கு முன்பு குளச்சலை சேர்ந்த சகாயராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கிழக்கு கடற்பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இரும்பு குண்டுகளை வீசினர்

ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்று மீன்களுடன் குளச்சலுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களின் படகு தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது அங்குள்ள மீனவர்கள் சிலர் விசைப்படகில் வந்து தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த குளச்சல் மீனவர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். இதைப்பார்த்ததும் தூத்துக்குடி மீனவர்கள் மேலும் சிலருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சுமார் 22 படகுகளில் அங்கு மீனவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து குளச்சல் மீனவர்களின் விசைப்படகை துரத்தத்தொடங்கினர்.மணப்பாடு கடற்பகுதி வந்தபோது தூத்துக்குடி மீனவர்களின் படகு குளச்சலை சேர்ந்த சகாயராஜின் படகு மீது உரசியது. இதில் அவரது படகு சேதமடைந்தது. இருப்பினும் ஆத்திரம் அடங்காத தூத்துக்குடி மீனவர்கள் கற்களையும், இரும்பு குண்டுகளையும் குளச்சல் மீனவர்களின் விசைப்படகில் தூக்கி வீசினர். இதனால் மீனவர்கள் உயிரை கையில் பிடித்தபடி வேகமாக குளச்சல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

கடலோர போலீசில் புகார்

இதுபற்றி சகாயராஜ் இன்று கடலோர போலீசாரிடம் புகார் செய்தார். அதில், மண்டபம் கடற்பகுதியில் மீன்பிடித்து திரும்பிய தங்களை தூத்துக்குடி மீனவர்கள் நடுக்கடலில் விரட்டி தாக்கியதாகவும், தங்கள் படகை சேதப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும், இதுபற்றி மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் விசாரித்து சேதமடைந்த படகுக்கு நிவாரணம் பெற்றுத்தருவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மீனவர்களால் துரத்தப்பட்ட குளச்சல் மீனவர் சகாயராஜின் படகில் உயர்ரக மீனாக கருதப்படும் ஆயில் சுறா அதிக அளவில் இருந்தது. அவை மருத்துவ குணம் கொண்டவை ஆகும். அவற்றின் மதிப்பும் பல லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த மீன்களை கேரள வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்று வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர் சம்பவம்

குளச்சலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 5 படகுகள் மற்றும் 66 மீனவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து சென்றனர். அதன்பின்பு மீன்வளத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டு வந்தனர்.இந்தநிலையில் அதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றது குளச்சல் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum