தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!

Go down

நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!  Empty நடிகை ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: பட அதிபர்!

Post  ishwarya Tue Mar 19, 2013 4:01 pm

"என் படத்தை தடை செய்ய முயன்றால், நடிகை ஸ்ரேயா மீது நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்று 'ராஜா போக்கிரி ராஜா' பட அதிபர் மலேசியா பாண்டியன் கூறியிருக்கிறார். மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்த 'போக்கிரி ராஜா' என்ற மலையாள படத்தை, மலேசியா பாண்டியன் என்ற பட அதிபர், 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், 'போக்கிரி ராஜா' படத்தை தயாரித்த தாமஸ் ஆன்டணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். 'போக்கிரி ராஜா' மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, வேறு எந்த மொழியிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சம்மதித்தேன். அந்த ஒப்பந்தத்தில் நானும், பட அதிபர் தாமஸ் ஆன்டணியும் கையெழுத்திட்டு இருக்கிறோம். அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆன்டணி மீறியிருக்கிறார். எனவே அந்த படத்தை தமிழ் உள்பட மற்ற மொழிகளில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த புகாரில் ஸ்ரேயா குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த படத்தை தமிழில், 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்துள்ள மலேசியா பாண்டியன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்)யில் நடிகை ஸ்ரேயா மீது புகார் செய்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- "நான் போக்கிரி ராஜா படத்தின் 'டப்பிங்' உரிமையை தாமஸ் ஆன்டணியிடம் வாங்கி, முறையாக பதிவு செய்துள்ளேன். எனக்கும், நடிகை ஸ்ரேயாவுக்கும் எந்த ஒரு நேரடி ஒப்பந்தங்களும் ஏற்படாதபோது, அவர் என் திரைப்படத்தை தடை செய்ய வழக்கு தொடர முயற்சிப்பது, எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கமும் தாமஸ் ஆன்டணியிடம் பேசி, பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர, என் படத்தை தடை செய்ய முயற்சி செய்யக்கூடாது. எந்த ஒரு தனி நபரோ அல்லது எந்த ஒரு அமைப்போ என் படத்தை தடை செய்ய முயன்றால், எனக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அப்படி முயற்சிப்பவர்கள் மீது கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்." இவ்வாறு பட அதிபர் மலேசியா பாண்டியன் கூறியிருக்கிறார். இப்டியெல்லாம் பண்ணியாச்சும் நானும் சினிமாவில் இருக்கேன்னு சொல்லாம சொல்றாங்க போல.....?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்…!
» பெண்மையை அசிங்கப்படுத்தியதாக நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
» ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்டு குமுதம் வார பத்திரிகை மீது நடிகை லட்சுமிராய் வழக்கு
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum