தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்…!

Go down

மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்…! Empty மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்…!

Post  ishwarya Fri Apr 05, 2013 4:56 pm

ஒப்பந்தத்தை மீறி விட்டதாக மலையாள பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்
கூறியிருக்கிறார். நடிகர் மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா, ரியாஸ்கான்
உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் “போக்கிரி ராஜா”.
இப்படத்தில் மம்முட்டியும், ப்ருத்விராஜூம் அண்ணன் தம்பியாக நடித்துள்ளனர்.
தனது தம்பியின் காதலை சேர்த்து வைக்க மம்முட்டி எவ்வளவு கஷ்டப்படுகிறார்
என்பதே இப்படத்தின் கதை. இப்படம் இப்போது தமிழில் “ராஜா போக்கிரி ராஜா”
என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாமஸ்
ஆண்டனி மீது நடிகை ஸ்ரேயா, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார்
செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, போக்கிரி ராஜா படத்தில் நான்
நடிக்கும் போதே, இந்தபடத்தை வேறு எந்த மொழியிலும், டப் செய்து
வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கான
ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்நிலையில் படஅதிபர் தாமஸ் ஆண்டனி,
ஒப்பந்தத்தை மீறி இப்படத்தை தமிழில் வெளியிட இருக்கிறார். இதனால் அவர் மீது
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன். மேலும்
இப்படத்தை வேறு எந்த மொழிகளிலும் ‌டப் செய்து வெளியிட தடை விதிக்க கோரி,
கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum