திருவெம்பாவை - 5
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 5
மாலறியா நாள்முகனும் காணா மலையினைநாம்
போல்அறிவோம் என்றுஉள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச்சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணவாய்காண்
ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்
பொருள்....
நறுமணம் வீசும் பொருட்களை பூசிய கூந்தலை உடைய பெண்ணே! இறைவன் மலை போல்
உயர்ந்தவன். அந்த அண்ணாமலையை திருமாலாலும், பிரம்மனாலும் காண முடியவில்லை.
ஆனால் நாம் அவனை அடைவேன் என்று பேசுகிறாய். பாலும், தேனும் ஒழுக பேசிய
குறும்புக்காரியே!
உனது வீட்டின் கதவை திறந்து விடு. இந்த விண்ணிலும், மண்ணிலும்
உள்ளவர்களாலும், பிற உலகத்தில் வாழ்கின்றவர்களாலும் அறிந்து கொள்ள
முடியாதவன் இறைவன்.
சிவனே! சிவனே! என்று அவன் திருநாமத்தை பாடுகிறோம். இதைக் கேட்ட பின்னும் நீ
கண் விழிக்காமல் உறங்குகின்றாயே. பரிமள மணம் வீசும் கூந்தலையுடைய நீ
எப்போது தான் இதை உணர போகிறாய், எழுந்திரு!
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum