திருவெம்பாவை 12
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை 12
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இரும் சுனை நீர் ஆடுஏலோர் எம்பாவாய்
பொருள்.....
நம்மைப்பிடித்துள்ள பிறவித்துன்பம் நீங்கும் படி நீராடக்கூடிய புனித நீராக
உள்ளவன். அவன் தில்லைச்சிற்றம்பலத்தில் தனது கையில் நெருப்பை ஏந்தி
நடனமாடுபவன். விண்ணும், மண்ணும் இணைந்த உலகங்கள் யாவையும் உருவாக்கியும்,
காப்பாற்றியும், பின்னர் உருமாற்றியும் விளையாடுபவன் அவன்.
அத்தகைய சிறப்பு மிக்க இறைவனை பாடி எங்கள் உடலில் அணிந்துள்ள வளையல்களம்,
ஆடைகளும் ஓசையிடப்புகழ்ந்து பாடுவோம். எங்களின் கூந்தலில் மேல் உள்ள
வண்டுகள் பாடவும், மலர்கள் நிறைந்த குளத்தில் மூழ்கி நீராடுவோம். இறைவனின்
பொற்பாதங்களை வணங்கி நீராடுவோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum