திருவெம்பாவை - 10
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழ்ன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவனூர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!
பொருள்.....
சிவபெருமான் கோவிலில் தொண்டு செய்யும் பெண்களே பரமசிவனின்
பாதங்கள் பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களையும் கடந்து சிறப்புடன்
விளங்குகின்றன.
மலர்கள் நிறைந்த அவனது திருமுடி எல்லா பொருள்களும் சென்று சேரும் முடிவாக
இருக்கிறது. அவன் உடலின் ஒரு பகுதியின் பார்வதி இருக்கிறாள்.
அவன்
வேதங்களின் முதல்வன். தேவர்களும், மனிதர்களும் சேர்ந்து அவனை பாடி
புகழ்ந்தாலும் அவன் புகழை முழுமையாக கூற முடியாது. அவன் தொண்டர்களின்
உள்ளங்களின் குடியிருப்பவன் அவன் ஊரில் வசிக்கும் பெண்களே எது அவனுடைய ஊர்
எது அவனுடைய பெயர் யார்? அவனுடைய உறவினர் உறவு
இல்லாதவர் யார்? அவனை பாடும் தன்மை எப்படி? என்று கூறினால் நாங்கள் அதன்
படி நடந்து கொள்வோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum