திருவெம்பாவை - 1
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை - 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாத்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசுஏலோர் எம்பாவாய்
பொருள்......
ஒளி பொருந்திய அகன்ற வாள் போன்ற கண்களை உடைய
பெண்ணே ஆரம்பமும முடிவும் இல்லாதவன் சிவபெருமான்.
அருட்பெரும் ஜோதி வடிவானவன். அவன் மகிமையை
பாடுகிறோம்.
அதை கேட்ட பின்னும் நீ தூங்குகிறாயே? உன் காதுகள் கேட்கும்
சக்தியற்று போனதா? மகாதேவனின் நெடிய சிலம்பணிந்த
திருவடிகளை தெருவில் நின்று நாங்கள் பாடுகிறோம். அதை
கேட்டதும் பக்தி நிறைந்த பெண் ஒருத்தி விம்மி விம்மி புரண்டு
விழுந்து இந்த நிலத்தில் தன்னை மறந்து கிடந்தாள். இதுவன்றோ
பக்தியின் உச்ச நிலை.
ஆனால் நீ இன்னும் உறங்கி கொண்டு இருக்கிறாயே? இது என்ன
விந்தை? எழுந்து வா
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum