திருவெம்பாவை-3
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
திருவெம்பாவை-3
முத்துஅன்ன வெண்நகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தம் ஆனந்தம் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துஉடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குஉடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்குஏலோர் எம்பாவாய்
பொருள்.....
முத்து
போன்ற பற்களை உடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்பாகவே எழுந்து எதிரே
வந்து சிவன் என் தகப்பன், ஆனந்தன், அமுதன் போன்றவன் என்றுவாய் அனிக்க
பேசுவாய். அப்படிப்பட்ட நீ துயில் நீங்கி எழுந்து வாசல் கதவை திறக்காமல்
இருக்கிறாயே. நீங்கள் இறைவன் மீது அதிக அன்பு கொண்டவர்கள் பண்பட்ட
தொண்டர்கள். இறைவன் மீது உரிமை உடையவர்கள். நான் உங்கள் கூட்டத்தில்
புதியவள். நீங்கள் என்னுடைய தவறை பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றுக்
கொள்ளக்கூடாது. உன்னை அறிவோம் தோழி அவனையே நினைத்து அவன் நினைவில்
உருகுபவர்கள் அவனைப்பாடாமல் இருக்க மாட்டார்கள்.தோழியே நீ அவனை பாட
வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum