தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 புதுவருட ராசி பலன்கள் – மிதுனம்

Go down

2013 புதுவருட ராசி பலன்கள் – மிதுனம் Empty 2013 புதுவருட ராசி பலன்கள் – மிதுனம்

Post  meenu Sat Mar 16, 2013 5:29 pm

செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள், தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள். உங்களுக்கு 2-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.

தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன்- மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.

வருடம் பிறக்கும் போது ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஒற்றை தலை வலி, இரத்த சோகை, மூட்டு வலி வரக்கூடும். தாய்மாமன்,அத்தை வகையில் செலவுகள் வந்துப் போகும். எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்ப்பீர்கள். இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்றெல்லாம் நினைத்து குழம்புவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்களும் வந்து செல்லும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள்,தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

சனிபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து நிறைவேற்ற பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய வேண்டியது வரும். தாய்மாமன் வகையில் செலவுகளும், சின்னசின்ன மனஸ்தாபங்களும் வந்து போகும். குலதெய்வக் கோவிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். சின்ன சின்ன வேலையை முடிப்பதில் கூட சிக்கல்கள் இருந்ததே! இனி முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும்.

வெகுநாட்களாக போக நினைத்தும் தடைபட்டுக் கொண்டிருந்ததே! இப்பொழுது குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உதவுவார்கள். மே 29-ந் தேதி முதல் குருபகவான் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தேனொழுக பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம்.

அடிக்கடி கோபப்பட்டு டென்ஷனாவீர்கள். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும். காய்ச்சிய நீரை அருந்துங்கள். லாகிரி வஸ்துகளை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவும் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலைச் சுற்றல் வரக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வீடுகட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum