தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2013 புதுவருட ராசி பலன்கள் – மகரம்

Go down

2013 புதுவருட ராசி பலன்கள் – மகரம் Empty 2013 புதுவருட ராசி பலன்கள் – மகரம்

Post  meenu Sat Mar 16, 2013 5:22 pm

அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள். வருடம் பிறக்கும் போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த தொடர்யுத்தமெல்லாம் விலகும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு பணம் வரும்.

குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் உறவினர்கள்,நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்பொழுது முடியும். வேலையில்லாதவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்‌கியம் கூடும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரையம், விரக்தி,ஏமாற்றம்,மறைமுக எதிர்ப்புகள் என வந்து நீங்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். பணத்தட்டுப்பாட்டை சமார்த்தியமாக சமாளிப்பீர்கள்.

உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்த பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். புகழ் பெற்ற வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும், சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.

உங்களுக்கு லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவிவழியில் இருந்த பனிபோர் நீங்கும்.

டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். உப்பு விற்க போய் மழை வந்த கதையாய் எதை தொடங்கினாலும் இழப்புகளும், ஏமாற்றங்களும் தானே ஏற்பட்டது இனி அந்த நிலை மாறும் அரைக்குறையாக நின்று போன வேலைகளெல்லாம் முழுமையடையும்.

மனக்கலக்கத்துடன் சோர்ந்துக் கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள்-. வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள்-. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உறவினர்கள்,நண்பர்களின் விசேஷங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தீர்களே! இனி உற்சாகமாக கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக்குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கேது 4-ம் வீட்டில் நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். தாய்மாமன் வகையில் செலவுகள் வந்துப் போகும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum