தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி

Go down

 நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி  Empty நம்பர் ஒன் நடிகை என்பதில் எந்த பெருமையும் இல்லை : சமந்தா பேட்டி

Post  ishwarya Thu Mar 14, 2013 2:56 pm

நம்பர் ஒன் நடிகை என்பதில் நம்பிக்கை இல்லை’ என்றார் சமந்தா. ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சமந்தா கூறியதாவது: எத்தகைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று கேட்கிறார்கள். என்னை தேடி வரும் படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறேன். யாருடைய வாய்ப்புக்கும், பணத்துக்கும் எனக்கு ஆசை கிடையாது. யாரையும் போட்டியாக கருதவில்லை. குறிப்பாக சொல்லப்போனால் நம்பர் ஒன் நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகும்போதும் இது மாறிக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்துக்கு நம்பர் ஒன் நடிகையாக இருப்பதில் பெருமை ஒன்றும் இல்லை. கோலிவுட்டில் படம் நடிக்க ஆரம்பித்தபோது எனக்கு தேர்வு செய்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. வந்த படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்தேன். அது தோல்வியில் முடிந்தது. இப்போதைக்கு படங்களை தேர்வு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இதுவே வெற்றிதான், வளர்ச்சிதான். இயக்குனர் கவுதம் மேனன் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக கூறுகிறார்கள்.

அப்படி எதுவும் இல்லை. அவர் எனக்கு தந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டேன். நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நித்யா கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்டு நடித்தேன். திடீர் திடீரென கோபப்பட்டு காதலனை பிரியும் கேரக்டர் எனக்கு. நிஜ வாழ்க்கையில் நான் அப்படி கிடையாது. ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிக்க முடியாமல் போனது பற்றி கேட்கிறார்கள். அதற்கு காரணம் எனது உடல்நலம்தான். தங்கள் படங்களில் நடிக்க என்னை அவர்கள் தேர்வு செய்ததை பெரிய விஷயமாக கருதுகிறேன். எதிர்காலத்தில் அவர்கள் படத்தில் நடிப்பேன். இந்தி படங்களில் நடிக்கமாட்டேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum