தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்

Go down

 என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள் Empty என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்

Post  meenu Fri Feb 01, 2013 1:25 pm


நேரம், காலம் வந்துவிட்டால் வேண்டாமென்றாலும் கல்யாணம் நிற்காது. இப்போது திருமணத்திற்கான காலம் வந்துள்ளது. ஜாதகம் பார்க்கும்போது முக்கிய பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று பாருங்கள். கூடிய விரைவில் திருமணம் நடந்து விடும்.

சூரிய பகவானை மனதில் நினைத்து தினமும் 108 தடவை கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி வணங்குங்கள்

நமஸ்தே கமலாநாத! நமஸ்தே கமலப்ரிய!
நம: கமல நாதாய பாஸ்கராய நமோநம:

வயதாக வயதாக உடம்பு உங்கள் சொல் பேச்சைக் கேட்காது. ஆனால், மனது கொஞ்சம் கட்டளையிட்டு இழுத்துப் பிடித்தால் கேட்கும். மிதமான உணவை உடலுக்கு கொடுங்கள். கனமான ஆன்மிக விஷயங்களை மனதுக்கு கொடுங்கள்.

யானை இடதும், வலதும், மேலும், கீழும் ஆடிக் கொண்டே இருக்கும். ஆனால், சிறிய இரும்புச் சங்கிலியை தும்பிக்கையில் கொடுத்து விட்டால் அதைப் பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கும். எனவே, மனதில் கவலைகள் இருந்தால் இருக்கட்டும்.

‘கவலையே போ’ என்றால் போகாது. ஆனால், இரும்புச் சங்கிலிபோல ஏதேனும் இறைவனின் திருநாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். வேதம் படித்தவரிடம் மந்திர உபதேசம் பெற்றுக் கொள்ளுங்கள்.

வேறு எந்த வேலையும் இனி இல்லை என்பதுபோல மனது மறந்தாலும், மீண்டும் மீண்டும் இழுத்துப் பிடித்து சொல்லுங்கள். பிறகு பாருங்கள்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மாதிரி, மகளுக்கும் நிம்மதியான மண வாழ்க்கை அமைந்து, நீங்களும் அமைதியாக இருப்பீர்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum