தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் கணவருக்கு 60 வயதாகிறது. சர்க்கரை நோய் மற்றும் மூட்டுவலியால் மிகவும் வேதனைப்படுகிறார். நல்லதொரு பரிகாரம் சொல்லி என் கணவர் நலமடைய உதவுங்கள்

Go down

 என் கணவருக்கு 60 வயதாகிறது. சர்க்கரை நோய் மற்றும் மூட்டுவலியால் மிகவும் வேதனைப்படுகிறார். நல்லதொரு பரிகாரம் சொல்லி என் கணவர் நலமடைய உதவுங்கள்  Empty என் கணவருக்கு 60 வயதாகிறது. சர்க்கரை நோய் மற்றும் மூட்டுவலியால் மிகவும் வேதனைப்படுகிறார். நல்லதொரு பரிகாரம் சொல்லி என் கணவர் நலமடைய உதவுங்கள்

Post  meenu Fri Feb 01, 2013 1:04 pm


மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என பொருள். மனதை உடையவன் மனிதன். தேனீக்கு உழைப்பையும், எறும்புக்கு சுறுசுறுப்பையும் கொடுத்த ஈசன் வேறு அறிவான மனதை கொடுக்கவில்லை.

அறிவையும், அறத்தையும் அடித்தளங்களாக கொண்ட மனித சக்திக்கு கஷ்டங்களை களைந்து நன்மைகளைப் பெருக்கிக்கொள்ளும் திறமை உண்டு.

அது எத்தனை வயதானாலும் பொருந்தும். மேலும், 59, 60, 61 வயதுகளில் உடல்நலக் குறைவு ஏற்படும் என்றே சஷ்டியப்த பூர்த்தி என்ற 60 வயது கல்யாணத்தை நமது முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர்.

ராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்களும் பெரும்பாலும் பிறந்த நிலைக்கு மறுபடி வருவதால், 60ம் ஆண்டில் மனிதன் மீண்டும் பிறக்கின்றான் என கூறப்பட்டுள்ளது.

துறவு மனதுடன், ஒரு தவ வாழ்க்கையை வாழும்படி சொல்கிறார்கள். எத்தனை விதமான உணவு வகைகளாக இருந்தாலும் இந்த வயதில் உயிர் வாழ என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என்கிற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வயதில் மனம் கேட்கும் விஷயங்களையெல்லாம் உடல் ஏற்றுக் கொள்ளாது. உங்கள் கணவருக்காக சனிக்கிழமைகளில் அரச மரத்தை குறைந்தது ஏழு முறை வலம் வந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி நமஸ்கரியுங்கள்.

வீட்டிலிருந்து வெல்லம் கலந்த எள்ளுருண்டையோ அல்லது எள்ளு சாதமோ தயாரித்து வந்து பக்தர்களுக்கு கொடுங்கள்.

‘மாருதம் மருதாம் ஸேவ்யம் ஸாரங்கவர வாஹனம்
ஸர்வப்ராணி அந்தரகதம் தூம்ரவர்ணம் அஹம்பஜே’

என்ற ஸ்லோகத்தை 11 தடவை சொல்லுங்கள். அடுத்து கீழ்க்காணும் நாமாவளியை மூன்று முறை சொல்லி வணங்குங்கள். கணவரின் உடல்நலம் சரியாகும்.

கோணஸ்தாய நம: பிங்களாய நம: பப்ரவே நம: கிருஷ்ணாய நம: ரௌத்ராய நம: அனந்தாய நம: யமாய நம: ஸெரையே நம: சனைச்சராய நம: பிப்லவாதி ஷுஸம்ஸ்தி தாய நம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, நன்கு படித்து முன்னேறி, என் கவலைகளைப் போக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.
»  என் கணவருக்கு மிக அதிகமாகக் குடிப்பழக்கம் உள்ளது. ஆனால் அவர் மிகவும் நல்லவர். எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ எங்கள் குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதிலிருந்து மீள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன்.
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
»  எனது மகன் சதீஷ் பி.இ, படித்து 13 வருடங்களாக தனியார் கம்பெனியில் பணி செய்தான். வயது 36. திருமணமும் அமையவில்லை. பணி உயர்வு, திருமணம் போன்ற விஷயங்களுக்கு பரிகாரம் சொல்லி உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகன் பிறந்திருக்கும் ரிஷப லக்னம் மிகவும் ச
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum