தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 49. மகனால் நிம்மதியில்லை. ஒரு அமாவாசையன்று ஏதோ ஓர் உருவம் என்னை அழுத்துவது போல உணர்ந்தேன். அடுத்து பௌர்ணமியிலும் என் உடல் சித்ரவதை அடைகிறது. டாக்டரிடம் காட்டினேன். உடல் ரீதியான உபாதை எதுவும் இல்லை என்கிறார். எனக்கு பரிகாரம் கூறவும்.

Go down

 என் வயது 49. மகனால் நிம்மதியில்லை. ஒரு அமாவாசையன்று ஏதோ ஓர் உருவம் என்னை அழுத்துவது போல உணர்ந்தேன். அடுத்து பௌர்ணமியிலும் என் உடல் சித்ரவதை அடைகிறது. டாக்டரிடம் காட்டினேன். உடல் ரீதியான உபாதை எதுவும் இல்லை என்கிறார். எனக்கு பரிகாரம் கூறவும்.  Empty என் வயது 49. மகனால் நிம்மதியில்லை. ஒரு அமாவாசையன்று ஏதோ ஓர் உருவம் என்னை அழுத்துவது போல உணர்ந்தேன். அடுத்து பௌர்ணமியிலும் என் உடல் சித்ரவதை அடைகிறது. டாக்டரிடம் காட்டினேன். உடல் ரீதியான உபாதை எதுவும் இல்லை என்கிறார். எனக்கு பரிகாரம் கூறவும்.

Post  meenu Fri Feb 01, 2013 12:29 pm


நீங்களாக எதுவோ அழுத்தும் பிரமையில் ஆழ்ந்துவிடாதீர்கள். ஏதேனும் உடல்நலக் கோளாறுடன், மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தால்
இப்படி ஆகும்.

மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் நிம்மதியின்மைக்கு ஒன்று, நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் விஷயத்தில் தோல்வியுற்றிருக்க வேண்டும். அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இருந்திருக்கக் கூடும்.

உங்கள் மகன் மிகவும் சிரமப்படுத்தியதாகவும், அதனால் பிரச்னைகள் அதிகமாகியது என்றும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள். உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

இதைவிட வேறெந்த காரணமும் உங்களது இப்போதைய நிலைக்கு வேண்டாம். அதனால், நிம்மதியாக இருக்கும் வழியை நீங்களாக கண்டுபிடிக்க முடியும். எந்தப் பிரச்னைக்கும் உடனடியாகத் தீர்வு காண்பது மனித இயல்பு.

ஆனால், பல சமயங்களில் அப்படி நிகழ்வதில்லை. நம்மால் தீர்வு காண முடியாத விஷயங்களுக்கெல்லாம் பெரியவர்களின் அறிவுரையை கேட்போம்.
வேதமறிந்தோரை அணுகி, ‘தில ஹோமம் செய்ய முடியுமா?’ என்று கேட்டுப் பாருங்கள்.

வில்வ மரத்தடியில் புரோகிதரை அழைத்துப் போய் ஆடிமாதப் பிறப்பு, தைமாதப் பிறப்பு நாட்களில் முன்னோர்கள் அனைவருக்கும் தனித்தனியாக எள் நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்து முடியுங்கள்.

சிவன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். மூன்று மாதம் வரை தொடர்ந்து காக்கைக்கு எள் சாதம் போடுங்கள். அமாவாசைதோறும் ஆற்றிலோ, குளத்திலோ கறுப்பு எள்ளை மீன்களுக்குப் போடுங்கள். எல்லாம் சரியாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
»  என் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான எந்தவித முயற்சியும் இல்லை. பெற்றோரும் மனத் துயரத்தில் உள்ளனர். பூரண நலம் பெற்று, திருமணமாகி வாழ பரிகாரம் கூறுங்கள்.
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum