தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்

Go down

  மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்  Empty மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்

Post  amma Sat Jan 12, 2013 1:37 pm



மதுராந்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஏரிகாத்த ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்தபோது அப்போதைய கலெக்டரால் உருவாக்கப்பட்டு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்து இருக்கிறது. இந்த கோவிலிருந்து மதுராந்தகம் ஏரி கலங்கல் செல்லும் வழியில் மதுராந்தகம் கிராம மக்களால் சப்தகன்னிகள் கோவில் உருவாக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோவிலில் ஆடி மாதம் ஐந்தாம் வாரம் அல்லது ஆவணி முதல் வாரம் கோவிலில் பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், பால் அபிஷேகம் செய்தல், சாமி வீதி உலா ஆகியவை கிராம மக்கள் ஆண்டு தோறும் செய்து வருகின்றனர். மேலும் அமாவாசை நாளில் இக்கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் நினைத்த காரியம் நடக்கும்.

நன்மைகள் நடைபெறும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது இந்த கோவில். மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள சப்தி கன்னிகள் ஆலயத்தில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் விசேஷ வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இதனால் பெண்கள் தங்களுடைய தாலி பாக்கியம், குழந்தை வரம் வேண்டியும் வழிபட்டு வருவதனால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. இது போன்று சுற்று வட்டார பகுதிகளில் சித்தாமூர், இலத்தூர், செய்யூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சப்த கன்னிகள் கோவில்கள் அமைந்துள்ளதால் மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum