தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து.

Go down

திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து. Empty திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து.

Post  ishwarya Mon May 27, 2013 11:47 am

கொலிவுட்டில் அர்விந்த் இராமலிங்கம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் படம் கர்மா. இப்படத்திற்கு பழம்பெரும் இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.கணேசன் இசையமைக்கிறார்.

இசையமைப்பு மற்றும் பாடல்களில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று கருதிய எல்.வி.கணேசன் கவிஞர் வைரமுத்துவிடம் இந்தப் படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டாம். அதற்கு பதிலாக கர்மா என்ற தலைப்பில் 10 குறள் எழுதித் தாருங்கள் என்று கேட்டிருந்தார்.

வைரமுத்துவும் பத்து குறள்களை எழுதிக் கொடுத்ததுடன் பாடியிருக்கிறார்.

இது குறித்து வைரமுத்து கூறுகையில், 133 அதிகாரங்களை படைத்தவர் திருவள்ளுவர். அதில் ஊழ்வினை என்ற அதிகாரமும் உண்டு. அதனை தொடர்புபடுத்தியும் படுத்தாமலும் பத்து குறள்களை எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

இன்றைக்கு வள்ளுவர் இல்லை. காலமும், வாழ்க்கையும் மாறிவிட்டது. தற்பொழுது திருவள்ளுவர் இருந்து குறள் எழுதினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து அதுபோல எழுதியிருக்கிறேன்.

எதிர்காலத்தில் 133 அதிகாரத்தில் உள்ள குறள்களையும் நவீன காலத்துக்கேற்ற வகையில் எழுதலாம் என்ற ஆசை இருக்கிறது என்றும் அப்படி எழுதினால் அதற்கு இந்தப் படம் எனக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதை பதிவு செய்வேன் எனவும் கூறினார்.

பத்து குறள்களையும் வைரமுத்துவின் குரலிலேயே ஒலிப்பதிவு செய்துள்ளனர். இவைகள் படத்தில் கதைக்கு ஏற்ற வகையில் ஆங்காங்கே பயன்படுத்த இருப்பதாக இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum