தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா மணிரத்னம் திடீர் சந்திப்பு

Go down

21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா மணிரத்னம் திடீர் சந்திப்பு Empty 21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா மணிரத்னம் திடீர் சந்திப்பு

Post  ishwarya Sat May 25, 2013 12:01 pm

இளையராஜா, மணிரத்னம் இடையேயான 21 வருட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மும்பையில் இவர்கள் திடீரென சந்தித்துக் கொண்டனர். மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படம் ‘பகல் நிலவு‘. முரளி, ரேவதி நடித்திருந்தனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதையடுத்து மணிரத்னம் இயக்கிய ‘இதயக்கோயில், ‘மௌனராகம், ‘நாயகன், ‘அக்னிநட்சத்திரம், ‘அஞ்சலி, ‘தளபதி என வரிசையாக எல்லா படங்களுக்கும் இளையராஜாவே இசை அமைத்தார். இந்நிலையில் இருவருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இளையராஜாவைவிட்டு பிரிந்த மணிரத்னம், 1992ம் ஆண்டு ‘ரோஜா படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து தனது படங்களுக்கு ரஹ்மானையே இசை அமைப்பாளராக அமர்த்தினார் மணிரத்னம்.

இதையடுத்து இளையராஜாவுடன் மனக்கசப்பு வலுத்தது கடந்த 21 வருடமாக இருவரும் எந்த படத்திலும் இணையவில்லை. இருவரின் சந்திப்புகூட நடந்ததில்லை. இவர்களை இணைக்கும் முயற்சி பலமுறை நடந்தது. அது நிறைவேறவில்லை. இந்நிலையில் அமிதாப்பை வைத்து ‘பா படம் இயக்கிய பால்கி தனது புதிய படத்துக்கு இளையராஜா ஒப்பந்தம் செய்துள்ளார். மணிரத்னம், இளையராஜாவுக்கு பால்கி நெருங்கிய நண்பர். புதிய படத்தின் இசை ஒலிப்பதிவு மும்பையில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடந்தது. அப்போது மணிரத்னம், இளையராஜா சந்திப்புக்கு பால்கி ஏற்பாடு செய்தார். இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இதையடுத்து இருவரின் மனக்கசப்பும் மறைந்தது. விரைவில் மணிரத்னம் படத்துக்கு இளையராஜா இசை அமைப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum