தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டாஸ்மாக் ஊழியரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Go down

 டாஸ்மாக் ஊழியரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்  Empty டாஸ்மாக் ஊழியரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Post  ishwarya Fri May 24, 2013 4:35 pm

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மைலாடி அருகே மருங்கூரில் இருந்து அமராவதி செல்லும் சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் முடிவு செய்தபடி, நள்ளிரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மதுபாட்டில் பெட்டிகளை இறக்கி வைத்தனர். நேற்றுமுன்தினம் காலை எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெயர் பலகை எதுவும் வைக்காமல் திடீரென மதுக்கடையை திறந்து விற்பனையை தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், சுய உதவி குழுவினர், பொதுமக்கள் நேற்று காலை மதுக்கடையை முற்றுகையிட்டனர். அப்போது கடை சூபர்வைசர் மற்றும் விற்பனையாளரை சிறைபிடித்து கடையை திறக்கவிடாமல் தடுத்தனர். இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், அஞ்சுகிராமம் போலீசார் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நாகர்கோவில் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க தூதரக ஊழியரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக இலங்கை மருத்துவர் மீது புகார்
» அமெரிக்க தூதரக ஊழியரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக இலங்கை மருத்துவர் மீது புகார்
» டாஸ்மாக் கடையில் கதாநாயகன் தேடல்
» ஆப்கான் : 'பொதுமக்கள் இழப்பு குறைகிறது'
» நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum