தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

Go down

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் Empty நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

Post  ishwarya Thu May 02, 2013 6:10 pm

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிககையை ஏற்க மறுத்த நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் இதுவரை அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகள் பற்றிய விவரத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று நீதிபதி லோத்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 839 டாஸ்மாக் மதுபான கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 1831 டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 839 கடைகளை அகற்றுவதறகு 5 மாத காலம் ஆகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரின் அனுமதி பெற்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அவற்றை உடனடியாக அகற்றுவது சாத்தியம் இல்லை. மேலும் தமிழ்நாடு அல்லாத பல மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாருக்கு சொந்தமாக மதுபானக் கடைகள் தொடர்ந்து செய்லபட்டு வருகின்றன.

அவற்றை அகற்றுவதற்கு அந்த மாநிலங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விளக்கத்தை படித்த நீதிபதிகள், இவ்வழக்கை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்தனர். அப்போது, நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘மெரினா’ படம் தயாரிப்பு வழக்கு: ரூ.3.76 கோடி லாபம் என கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
» தமிழக, புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
»  நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» வன்முறையை தூண்டும் பாடல்…! கொலவெறிக்கு எதிராக கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum