ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை
Page 1 of 1
ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை
கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார்.
மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார்.
இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார். பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார்.
‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார்.
இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார். பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார்.
‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் செந்தில் கூட்டத்தில் கல்வீச்சு – 2 சிறுமிகள் படுகாயம்
» முதல் மாணவன்' படம் மே மாதம் ரிலீசாகும்: நடிகர் கோபி காந்தி பேட்டி
» மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி
» நம்ம குஷ்பு ஐ.நா. கூட்டத்தில் பேசப் போறாருங்கோ..!!
» ரங்கநாதன் தெருவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா
» முதல் மாணவன்' படம் மே மாதம் ரிலீசாகும்: நடிகர் கோபி காந்தி பேட்டி
» மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி
» நம்ம குஷ்பு ஐ.நா. கூட்டத்தில் பேசப் போறாருங்கோ..!!
» ரங்கநாதன் தெருவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum