தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2008 ஐ.பி.எல். போட்டியின்போது ஹர்பஜன் என்னை திட்டமிட்டு குத்தினார்: ஸ்ரீசாந்த்

Go down

2008 ஐ.பி.எல். போட்டியின்போது ஹர்பஜன் என்னை திட்டமிட்டு குத்தினார்: ஸ்ரீசாந்த் Empty 2008 ஐ.பி.எல். போட்டியின்போது ஹர்பஜன் என்னை திட்டமிட்டு குத்தினார்: ஸ்ரீசாந்த்

Post  ishwarya Sat May 04, 2013 12:55 pm

கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்தை, மும்பை அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்துவிட்டார். இதனால் அழுதபடியே வந்த ஸ்ரீசாந்துக்கு, அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். இதனால் ஹர்பஜன் சிங் அந்த தொடர் முழுவதும் நீக்கப்பட்டார். ஸ்ரீசாந்தை எச்சரித்து போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து அதுதொடர்பான முழு தகவல்களை ஸ்ரீசாந்த் இப்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடந்த சம்பவம் குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது அனைவரும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் (ஹர்பஜன் சிங்) என் கன்னத்தில் அறையவில்லை. அவர் என்ன செய்தார் என்பதை, அப்போது பதிவு செய்த வீடியோ காட்சிகளை முழுவதும் பார்த்தால் தெரியும்.

அவர் இதனை மோசமாக உணர வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. இதில் என் மீது எந்த தவறும் இல்லை. ஆனால் ஊடகங்கள் என்னை குறை கூறின. போட்டி முடிந்ததும் அவருடன் கைகுலுக்கச் சென்றேன். தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஏற்கனவே திட்டமிட்டு என்னை முழங்கையால் குத்தினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum