தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலம் மாவட்டத்தில் மீண்டும் `தலை' தூக்கிய ஆபாச நடனங்கள்

Go down

சேலம் மாவட்டத்தில் மீண்டும் `தலை' தூக்கிய ஆபாச நடனங்கள் Empty சேலம் மாவட்டத்தில் மீண்டும் `தலை' தூக்கிய ஆபாச நடனங்கள்

Post  ishwarya Fri May 03, 2013 12:59 pm

தமிழ்நாட்டிலேயே அழகிகளின் குத்தாட்டத்துக்கு மிகவும் பிரபலமாக திகழ்கிறது சேலம் மாவட்டம். சமீப காலமாக காணாமல் போய் இருந்த அழகிகளின் ஆபாச நடனம் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக ஓமலூர், காடையாம்பட்டி, சுண்டகாபட்டி, காருவள்ளி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பச்சனம்பட்டி, காமலாபுரம் ஆகிய ஊர்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தது.

இந்த விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, சேலம், கோவை போன்ற நிகரங்களில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இரவு நேரம் குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் அரை, குறை ஆடையுடன் இரட்டை அர்த்த வசனத்துடன் கூடிய முக்கல், முனங்கல் பாடல்களுக்கு அவர்கள் மேடையில் போட்ட குத்தாட்டம் இளசுகளை மட்டுமல்ல, பெரிசுகளையும் கிறங்கடித்தது.

ஆபாசத்தின் உச்சத்தை தொடும் வகையில் அழகிகள் ஜோடிகளுடன் நெருக்கமாக ஆடிய ஆபாச ஆட்டத்தை அவர்கள் `ஆ' என வாயை பிளந்தபடி பார்த்து `உச்' கொட்டினர். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த நிகழ்ச்சியில் அழகிகளுக்கு பணத்தை யார் அதிகமாக வாரி இறைக்கிறார்களோ?

அதற்கேற்ப அழகிகளும் தங்கள் ஆடைகளில் தாராளத்தை காட்டி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து எல்லோரையும் அசர வைத்தனர். பொதுவாக இரவு 11 மணி வரை தான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் சில ஊர்களில் இந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு நள்ளிரவை தாண்டியும் அழகிகள் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை `குஷி' படுத்தினார்கள்.

இந்த கன்றாவியெல்லாம் போலீசாரின் கண் எதிரிலேயே அரங்கேறியது. ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆபாச நடனத்தை அந்த ஊரைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி.க்கள் மேடையில் அமர்ந்து இமை கொட்டாமல் பார்த்து ரசித்துள்ளனர்.

ஊருக்கு உபதேசம் சொல்லும் ஊர் பெரியவர்களே இப்படி ஆபாச நடனத்தை ஆர்வத்துடன் பார்த்தால் இளைஞர்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருப்பார்கள்? என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோவில் திருவிழாவை சிறப்பிக்க நடன நிகழ்ச்சிகள் நடத்துவதில் தவறு இல்லை.

ஆனால் ஆபாசமாக, அங்க அசைவுகளுடன் அழகிகள் அரங்கேற்றும் நடனத்தை தான் ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். ஒரு சில பகுதியில் நல்ல `மப்பில்' வரும் இளஞர்களால் ஏற்படும் அடி-தடி கலாட்டாவும் திருவிழாவிற்கு வந்தவர்களை கலங்கடித்து விடுகிறது.

இதுபோன்ற சம்பவம் இனி மேலாவது நடைபெறாமல் இருந்தால் இளைஞர்கள் சீரழியாமல் இருப்பார்கள். கோவில் திருவிழாக்களில் அழகிகளின் ஆபாச நடனத்தை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். போலீசார் ஏறெடுத்து பார்ப்பார்களா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum