தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேர்தலில் போட்டியிட முஷரப்புக்கு வாழ்நாள் தடை: பாகிஸ்தான் கோர்ட் தீர்ப்பு

Go down

தேர்தலில் போட்டியிட முஷரப்புக்கு வாழ்நாள் தடை: பாகிஸ்தான் கோர்ட் தீர்ப்பு Empty தேர்தலில் போட்டியிட முஷரப்புக்கு வாழ்நாள் தடை: பாகிஸ்தான் கோர்ட் தீர்ப்பு

Post  ishwarya Thu May 02, 2013 6:06 pm

பெனாசீர் பூட்டோ கொலை, நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப், கைது நடவடிக்கையை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், மே 11-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றார்.

இதற்காக கடந்த மாதம் நாடு திரும்பிய அவருக்கு கடும் சோதனை காத்திருந்தது. அவரை போலீசார், கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் அவரது நீதிமன்றக் காவல் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே முஷாரப் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள், பெஷாவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது முஷரப் வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட், முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாக தீர்ப்பளித்தனர்.

இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum