காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்: ராகுல் காந்தி
Page 1 of 1
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்: ராகுல் காந்தி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி கர்நாடகத்தில் நேற்று 3-வது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகம் பல்வேறு வளங்கள் நிறைந்த மாநிலம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளிப்படையான, உறுதியான அரசு இருந்தது. ஆட்சியில் ஒட்டிக்கொள்ள பா.ஜனதா கட்சியானது மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்தது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது அரசியல் நன்னெறிகளுக்கு அழிவை ஏற்படுத்தும் செயலாக அமைந்தது.
கடந்த தேர்தலுக்கு முன் பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் மாநிலம் ஒளிரும் என்று அக்கட்சியின் தலைவர்கள் சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல், முறைகேடுகள் மூலம் அந்த கட்சியின் தலைவர்கள் தான் ஒளிர்கிறார்கள். சிலர் ஜெயிலுக்கும் போய் இருக்கிறார்கள்.
கர்நாடக வரலாற்றில் இதுபோன்று எப்போதும் நடந்தது இல்லை. பா.ஜனதா அரசு ஊழல் அரசு. மாநிலத்தை கொள்ளையடித்தது தான் இந்த அரசின் சாதனை. பா.ஜனதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் சாதியின் பெயரால் மக்களை பிரித்து இருக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து உள்ளனர். இரும்பு தாது, நிலம் ஆகியவற்றை சுரண்டிவிட்டனர்.
கர்நாடகத்தின் எதிர்காலத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டது. ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. கர்நாடக மக்கள் பொறுமைக்கு பெயர் பெற்றவர்கள். பா.ஜனதாவின் 5 ஆண்டுகால மோசமான அரசை நீங்கள் பொறுத்துக்கொண்டீர்கள். அவர்களை வெளியேற்ற தற்போது உங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. உங்கள் ஓட்டை பயன்படுத்தி பா.ஜனதாவை வெளியேற்றுங்கள்.
பா.ஜனதா மதசார்பற்ற கட்சி அல்ல. நாட்டின் ஒருமைப்பாட்டை கருதி இந்திய அரசியலில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவது தான் நல்லது. ஏழை மக்களின் நலனுக்காக இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்.
இந்த முறை மாநிலம் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக கர்நாடக மக்கள் காங்கிரசை வெற்றி பெற செய்வார்கள். நாங்கள் வெளிப்படையான நல்லாட்சியை வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறேன். கர்நாடகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காங்கிரஸ் ஆதரவு அலை வீசுகிறது. அதனால் வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம்.
கர்நாடக பா.ஜனதா அரசு மக்களின் எதிர்காலத்தை சுரங்க கொள்ளை கும்பலான ரெட்டி சகோதரர்களிடம் அடகுவைத்து மோசம் செய்துவிட்டது. பாராளுமன்றத்தில் ஊழலை பற்றி பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள். கர்நாடக ஊழல் பற்றி அவர்கள் பேச மறுக்கிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி ஜெயிலுக்கு போனதை சொல்ல மாட்டார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
கர்நாடகம் பல்வேறு வளங்கள் நிறைந்த மாநிலம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளிப்படையான, உறுதியான அரசு இருந்தது. ஆட்சியில் ஒட்டிக்கொள்ள பா.ஜனதா கட்சியானது மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்தது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது அரசியல் நன்னெறிகளுக்கு அழிவை ஏற்படுத்தும் செயலாக அமைந்தது.
கடந்த தேர்தலுக்கு முன் பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் மாநிலம் ஒளிரும் என்று அக்கட்சியின் தலைவர்கள் சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல், முறைகேடுகள் மூலம் அந்த கட்சியின் தலைவர்கள் தான் ஒளிர்கிறார்கள். சிலர் ஜெயிலுக்கும் போய் இருக்கிறார்கள்.
கர்நாடக வரலாற்றில் இதுபோன்று எப்போதும் நடந்தது இல்லை. பா.ஜனதா அரசு ஊழல் அரசு. மாநிலத்தை கொள்ளையடித்தது தான் இந்த அரசின் சாதனை. பா.ஜனதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் சாதியின் பெயரால் மக்களை பிரித்து இருக்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து உள்ளனர். இரும்பு தாது, நிலம் ஆகியவற்றை சுரண்டிவிட்டனர்.
கர்நாடகத்தின் எதிர்காலத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டது. ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. கர்நாடக மக்கள் பொறுமைக்கு பெயர் பெற்றவர்கள். பா.ஜனதாவின் 5 ஆண்டுகால மோசமான அரசை நீங்கள் பொறுத்துக்கொண்டீர்கள். அவர்களை வெளியேற்ற தற்போது உங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. உங்கள் ஓட்டை பயன்படுத்தி பா.ஜனதாவை வெளியேற்றுங்கள்.
பா.ஜனதா மதசார்பற்ற கட்சி அல்ல. நாட்டின் ஒருமைப்பாட்டை கருதி இந்திய அரசியலில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவது தான் நல்லது. ஏழை மக்களின் நலனுக்காக இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்.
இந்த முறை மாநிலம் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக கர்நாடக மக்கள் காங்கிரசை வெற்றி பெற செய்வார்கள். நாங்கள் வெளிப்படையான நல்லாட்சியை வழங்குவோம் என்று உறுதி அளிக்கிறேன். கர்நாடகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காங்கிரஸ் ஆதரவு அலை வீசுகிறது. அதனால் வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம்.
கர்நாடக பா.ஜனதா அரசு மக்களின் எதிர்காலத்தை சுரங்க கொள்ளை கும்பலான ரெட்டி சகோதரர்களிடம் அடகுவைத்து மோசம் செய்துவிட்டது. பாராளுமன்றத்தில் ஊழலை பற்றி பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள். கர்நாடக ஊழல் பற்றி அவர்கள் பேச மறுக்கிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி ஜெயிலுக்கு போனதை சொல்ல மாட்டார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சி.பி.ஐ.யை பயன்படுத்தி எதிர்ப்பவர்களை ஜெயிலுக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சியால் முடியும் முலாயம்சிங் யாதவ் கடும் தாக்கு
» ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை
» பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - காங்கிரஸ் உறுதி
» ராகுல் காந்தி
» மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி
» ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை
» பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் - காங்கிரஸ் உறுதி
» ராகுல் காந்தி
» மாற்றங்களின் நாயகன் ராகுல் காந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum